தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது.
இந்த நிலையில் அடுத்ததாக தமிழில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இவர் தனது மூன்று படங்களிலும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவருடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்ரன் அவ்வப்போது இளையராஜாவின் இசை குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடவும் தவறுவதில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் இளையராஜாவை சந்தித்ததாக கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், ஏற்கனவே இரண்டு முறை அவரை சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறியதால் இந்த முறை மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில். வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது, தான் பணியாற்றி வரும் படத்தை முடித்தபின் அதற்கு அடுத்த படத்தில் நிச்சயமாக இளையராஜாவின் இசையில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.