இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது.
இந்த நிலையில் அடுத்ததாக தமிழில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இவர் தனது மூன்று படங்களிலும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவருடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்ரன் அவ்வப்போது இளையராஜாவின் இசை குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடவும் தவறுவதில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் இளையராஜாவை சந்தித்ததாக கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், ஏற்கனவே இரண்டு முறை அவரை சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறியதால் இந்த முறை மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில். வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது, தான் பணியாற்றி வரும் படத்தை முடித்தபின் அதற்கு அடுத்த படத்தில் நிச்சயமாக இளையராஜாவின் இசையில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.