பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்திலும், 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றும், சில சிறிய தவறுகள் நடைபெற்றுள்ளது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விரைவில் சரி செய்ய சோதனையிட்ட துறையினர் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'புஷ்பா 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.