தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான 9 மணி சிறப்புக் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பேன் என படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இதுவரை பார்க்கவில்லை என இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் போது அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. படம் ஓடிடியில் வந்த பிறகும், டிவியில் ஒளிபரப்பான பிறகும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரே இப்படி சொல்வதா என பலர் கிண்டலடித்தார்கள்.
பார்த்திபன் இன்று காலை அவருடைய டுவிட்டரில், “இரண்டாம் பகுதி 28ல்..! என்னுடையப் பகுதி மிகுதியோ அல்லது குறைவோ(screen space) யாமறியோம்! Trailer-ஐ காண்கையில் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. வானத்தில் பிறை போல அளவில் குறைவேயாயினும் நிறைய நட்சத்திரங்களுடன் பங்குப் போட்டு வானத்தை அழகாக்கியதில் மகிழ்வே! Max நண்பர்களோடு IMAX-ல் முதல் நாளே பார்க்கிறேன். திரையில் சந்திப்போம் நண்பர்களே !,” என அவருடைய காட்சிகள் குறைந்திருக்கலாம் என்ற குறையோடு பதிவிட்டுள்ளார்.