பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை குறித்து இயக்குனர் ஹரி பேட்டி அளித்துள்ளார். அதன்படி, "விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். அதனால் எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. குறிப்பாக விஷால் இந்த படத்தில் போலீஸாக நடிக்கவில்லை. எப்போதும் என் படங்களில் வருவது போல அதிரடியான சண்டை காட்சிகள் இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் பேசப்படும் கன்டென்ட் தனித்துவமானது. அதேபோல் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,ரேணிகுண்டா,காரைக்குடி,வேலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் " என கூறியுள்ளார்.