பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரைக்கு வருகிறது. இப்போது சைரன், இறைவன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க கிராமத்து கதையில் தயாராக உள்ளது. முதன்முறையாக ஜெயம் ரவி படம் முழுக்க வரும் கிராமத்து வேடத்தில் நடிக்க போகிறார்.