திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என பல படங்களை இயக்கியவர் ராம். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. அதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் தான் டப்பிங் பேசிய வீடியோக்களை வெளியிட்டு இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனால் ராம் இயக்கி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.