இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 .இப்படம் இன்று (ஏப். 28) வெளியாகிறது. முதல் நாள் ஷோவை ரசிகர்களுடன் ஜெயம் ரவி காலை 9 மணிக்கு சென்னை குரோம்பேட்டை திரையரங்கிலும், கார்த்தி காலை 9 மணிக்கு சென்னை காசி தியேட்டரிலும் பார்த்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேப்போன்று விக்ரம், திரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தை சென்னையில் இன்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
சென்னை, வடபழனியில் உள்ள தியேட்டரில் பொதுமக்களுடன் சேர்ந்து, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், துலிபாலா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். காசி தியேட்டரில் படத்தை பார்வையிட சென்ற கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தியேட்டரில் உள்ள கண்ணாடி உடைந்து சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியது. உடைந்த கண்ணாடிக்கான செலவை கார்த்தி ஏற்றுக் கொண்டார்.