படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'அருவி' படத்திற்கு பிறகு அதிதி பாலன் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. தங்கர்பச்சான் இயக்கி உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதிதி பாலன் கூறியதாவது: இந்த படத்தில் கண்மணி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும்போது அதனை எவ்வாறு அந்த பெண் கையாளுகிறார் என்பதே படத்தின் கதை. பெண்ணுக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவை சொல்லும் படம்.
தங்கர்பச்சானின் வழக்கமான குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வை அடிப்படையாக கொண்ட கதை. கதையை தாண்டி பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நான் பணி புரிந்தது நல்ல அனுபவம். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. பாரதிராஜா நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக் கொடுத்தார்.
நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஆனால் நடிக்க வந்த பிறகு வழக்கறிஞராக பணியாற்றவில்லை. நடிக்க மட்டுமே செய்கிறேன். இப்போதைக்கு நடிப்புதான். ஆனாலும் வழக்கறிஞர் பணியை கைவிட மாட்டேன். தமிழ் படத்தில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்கிறார்கள். முதல் படமான அருவி சீரியசான படமாக இருந்ததால் அதுபோன்ற படங்களில்தான் நடிப்பேன் என்று கருதி விட்டார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக இருக்கிறேன். தவிர, என்னை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லை. அதன் காரணமாகவும் வாய்ப்புகள் வராமல் இருந்திருக்கலாம். என்றார்.