வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அருவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் படவேட்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் 'கோல்ட் கேஸ்' (cold case) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதிதி பாலன். பிரித்விராஜ் இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அதிதி பாலன் இதில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்தப்படம் பற்றி அதிதி பாலன் கூறும்போது, “நானும், என் அம்மாவும் சேர்ந்துதான் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டையே படித்தோம். இதில் எனக்கு தனித்தன்மை வாய்ந்த துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரம். ஹீரோ பிரித்விராஜூக்கும், எனக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாங்கள் இருவரும் அதிக காட்சிகளில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிவின்பாலியுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, அவரை விட பிரித்விராஜ் கொஞ்சம் சீரியஸான மனிதர் தான்.. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளே அவருடன் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது” என கூறியுள்ளார் அதிதி பாலன்.