இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம் வந்தவர் ரவீனா டாண்டன் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர். பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து விருதுகளை வென்றவர். தமிழில் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், கேஜிஎப்-3 படத்தில் தான் நடிக்க இருப்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், கேஜிஎப் 2 படத்தில் மறைந்த இந்திராவின் மாதிரியான இந்திய பிரதமராக நடித்திருந்தேன். அந்த படத்தின் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று கூறியுள்ள ரவீனா டாண்டன், அடுத்து கேஜிஎப் படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடிப்பதற்காக செட்டுக்குள் செல்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்திலும் எனக்கு ஒரு அழுத்தமான கதா பாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.