ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய டைரக்சனில் விஜய் நடிக்க இருக்கிறார் என பல யூகங்கள் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைந்து விஜய் பணியாற்ற உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது.
தெலுங்கில் ரவி தேஜா நடித்த கிராக், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி தான் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அவர் விஜய் படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரே உறுதிப்படுத்தும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை நடிகர் விஜய் துவங்கினார். தற்போது கோபிசந்த் மாலினேனி விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து அவர் விஜய் படத்தை இயக்குவதை மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.