இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய டைரக்சனில் விஜய் நடிக்க இருக்கிறார் என பல யூகங்கள் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைந்து விஜய் பணியாற்ற உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது.
தெலுங்கில் ரவி தேஜா நடித்த கிராக், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி தான் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அவர் விஜய் படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரே உறுதிப்படுத்தும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை நடிகர் விஜய் துவங்கினார். தற்போது கோபிசந்த் மாலினேனி விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து அவர் விஜய் படத்தை இயக்குவதை மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.