தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்படக்குழுவினர் தொடர்ந்து ஸ்ரேயாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தாகூர் என்ற படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.