தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகின் வாரிசு நடிகர்களில் ஒருவர் அகில். நட்சத்திரத் தம்பதிகளான நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன். தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'அகில்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பின் நான்கைந்து படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
அவர் நாயகனாக நடித்த 'ஏஜன்ட்' என்ற தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளிவந்தது. படத்திற்கு மோசமான வரவேற்பும், வசூலும் கிடைத்து முதல் நாளிலேயே படத்தைப் படுதோல்வி படம் என்று சொல்லிவிட்டார்கள்.
படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்கரா படம் வெளியான இரண்டு நாளிலேயே படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று டுவிட்டரில், “ஏஜன்ட்டின் முழு பழியையும் நானே ஏற்க வேண்டும். இது மேல்நோக்கிய பணி என்று எங்களுக்குத் தெரிந்திருந்தும் நாங்கள் வெற்றி பெற நினைத்தோம். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டோம்.
படத்திற்காக முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல், படத் தொடங்குவதில் சில பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு கோவிட்டையும் எதிர் கொண்டோம். எந்தவிதமான சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த விலையுயர்ந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்கிறோம். எங்களது எதிர்கால திட்டங்களில் அர்ப்பணிப்புடன் திட்டமிடல் மற்றும் கடின உழைப்புடன் இழப்புகளை ஈடு செய்வோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான சில தினங்களிலேயே இப்படி தோல்விக்காக ஒரு தயாரிப்பாளர் காரணத்தையும், மன்னிப்பையும் கேட்டிருப்பது தெலுங்கு திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாது மற்ற மொழித் திரையுலகத்தினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.