அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த சர்ச்சையானது இப்போது வரை சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜோ மைக்கேல் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அதில், விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு எதிராக பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதற்கு இன்று வரை சரியான பதில் கிடைக்காத நிலையில், ஜோ மைக்கேல் அளித்த ஆர்டிஐ மனுவை திரும்ப பெற கூறி அசீமின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.