திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தி கொண்டாட இருக்கிறார்கள். வருகிற ஜூன் 11ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவை 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தளபதி கூறும்போது “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திரைப்பட மற்றும் சின்னத்திரை துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெறும்.
ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைக்க இருக்கிறோம்” என்றார்.