தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வரும் ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை குறித்து இப்பட ஒளிப்பதிவாளர் வித்து அயனா பகிர்ந்துள்ளார். அதன்படி, "மாவீரன் படம் மண்டேலா படத்தை விட பல மடங்கு பெரிய படமாக உருவாகியுள்ளது. ஒரு சில முக்கிய காட்சிகளை 3D Rig என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எடுத்துள்ளோம். அதேபோல், விக்ரம் படத்தின் இடைவெளி காட்சிக்கு பயன்படுத்திய MOCOBOT கேமராவை இந்த படத்தில் சீனா சீனா பாடலுக்கு பயன்படுத்தியுள்ளோம். இந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் 50 பேர் முதல் 200 பேர் வரை நடித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.