தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாநாடு படத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலமாக தனது படத்திற்கான ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்தநிலையில் அவர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளது, தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளது, அந்த படம் தமிழில் வெளியாக இருப்பது என எல்லாமாக இந்த புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமல்ல சமீபத்தில் வெளியான டிரைலர் கூட அந்த எதிர்பார்ப்பை கூட்டவே செய்துள்ளது.
ஆனால் இந்த டிரைலரை வைத்து எதுவுமே முடிவு செய்து விட வேண்டாம், படம் இன்னும் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு. அது மட்டுமல்ல, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் நாகசைதன்யா பேசும்போது, 'இந்த படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நகரும்.. 40வது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் இறுதிவரை ஒரே அதிரடியாக இருக்கும். குறிப்பாக பின்னணி இசையுடன் கூடிய ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக எங்களுடைய கஸ்டடிக்குள் வந்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார்.