தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கில் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் ‛தண்டேல்'. பிப்ரவரி 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதால் தற்போது படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் படம் மீனவர் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கதைப்படி மீனவரான நாக சைதன்யா, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது தவறுதலாக பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்தபோது, அங்குள்ள காவல் துறையினர் அவரை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதையடுத்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, இந்தியாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் சில சக்தி வாய்ந்த வசனங்களை பேசும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
அதனால் இந்த படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் வெளியிட்டு பான் இந்தியா படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்தி சினிமா ரசிகர்கள் தேச பக்தி படங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதால் இந்த தண்டேல் படத்தை பாலிவுட்டில் பிரமாண்டமாக வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக புரமோஷன்களில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.