தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரமானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான். இதனால் தான் சமந்தா உடன் நாக சைதன்யா விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் சோபிதா துலிபாலா அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "என்னை பற்றி பரவி வரும் காதல் வதந்திகள் யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் எப்போதும் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த தவறும் செய்யாதபோது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.