இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரமானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான். இதனால் தான் சமந்தா உடன் நாக சைதன்யா விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் சோபிதா துலிபாலா அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "என்னை பற்றி பரவி வரும் காதல் வதந்திகள் யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் எப்போதும் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த தவறும் செய்யாதபோது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.