ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கத்தில் உருவான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. அப்படத்தில் யானை வளர்ப்பாளர்களாக நடித்த கணவன், மனைவியான பொம்மன், பெல்லி ஆகியோரை இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவினர் படக் குழுவினரை அழைத்து பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர். பொம்மன், பெல்லி ஆகியோருக்கு தனது எண் பதிவிட்ட ஜெர்ஸியை வழங்கி கௌரவித்தார். இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியிலும் சிறப்புப் பாராட்டு விழா ஒன்றையும் நடத்த உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு யானைகள் நலனுக்கான நன்கொடையையும், படத்தில் பங்கேற்ற அம்மு, ரகு யானைகளுக்கான அன்றாட செலவுகளுக்கான தொகையையும் வழங்க உள்ளார்கள்.