ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டு ஐரோப்பா நாடுகளுக்கு சென்று சுற்றுப் பயணம் செய்த அஜித் குமார் சமீபத்தில் பூடான், நேபாளம் போன்ற நாடுகளில் பைக் ரைடு சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த உலக சுற்று பயணத்தை அவர் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிரமான வானிலையை எதிர்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ளார். நேபாளம், பூடான் நாட்டையும் கடந்து சென்றார். அவரது உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்திற்குள் அஜித்குமார் முடித்து விடுவார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.