'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இப்படம் தமிழில் விஜய் நடித்து வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது அதற்காக படக் குழுவினர்கள் புது போஸ்டர்கள் வெளியிட்டனர் அதில் தான் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் நடிகை பூனம் கவுர் போஸ்டர் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார் . பவன் கல்யாணின் கால்களைக் காட்டும் போஸ்டர் ஒன்று வெளியானது அதற்கு பூனம் கவுர், பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பெயர் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிக்கும் செயல் என்று பூனம் டுவீட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாத போது அவர்களை அவமதிக்காதீர்கள். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் போஸ்டர் பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்துகிறது. இதை எப்படி சொல்வது ஈகோவா அல்லது அறியாமையா'' என பதிவிட்டார்.
இந்நிலையில் அடுத்து வெளியான இந்த படத்தின் மற்றொரு போஸ்டரில் படத்தின் டைட்டிலை மேலே குறிப்பிட்டு திருத்தி வெளியிட்டனர்.