ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிடாரி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதன்பிறகு தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் அடுத்ததாக அவரது நடிப்பில் வாழி என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த அயல்வாசி என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியின் போது, கேரள மலபார் இஸ்லாமிய திருமணங்கள் குறித்து அவர் கூறுகையில், கண்ணூரில் நடக்கும் அது போன்ற திருமண நிகழ்வுகளில் அங்குள்ள பெண்கள், வீடுகளின் சமையலறை பக்கம் தான் உணவு பரிமாறுவார்கள் என்பது போன்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. அவரது இந்த பேச்சுக்கு பல பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து நிகிலா விமல் கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்படுவது போல, எதையும் நான் சர்ச்சையாக கூறவில்லை. சொல்லப்போனால் எனது பேட்டியில் நான் கூறிய ஒரு கருத்தை திரித்து தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக நான் யாருக்கும் விளக்கம் எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.