மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமான லைகாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.