இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமான லைகாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.