நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார். இதன் காரணமாக அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை அவர் தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் ரஜினிக்கு ரெடி பண்ணிய அதே கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார். ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்று விட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.