தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஹாரிஸன் போர்ட். புதையலை தேடிச் செல்லும் 'இண்டியான ஜோன்ஸ்' படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர். 1981ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இதன் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் நாயகனான நடித்த ஹாரிஸன் போர்டுக்கு அப்போது 39 வயது. தற்போது 80 வயதாகும் அவர் இண்டியானா ஜோன்ஸ் படத்தின் 5வது பாகத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ள இதுதான் இண்டியானா ஜோன்ஸ் படவரிசையின் இறுதி பாகமாகும். வருகிற ஜூன் 30ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் திரையீடு முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹாரிஸன் போர்டுக்கு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டினர். பின்னர் அவரது சினிமா பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயரிய 'தங்கப் பனை' விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் ஹாரிஸன் போர்டு பேசியதாவது: நான் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். நாம் சாகும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை நம் கண் முன்னே வரும் என்று சொல்வார்கள். இப்போது என் வாழ்க்கை என் கண்முன்னால் நிழலாடுகிறது. என் வாழ்க்கை முழுவதும் அல்ல. வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி. என்னுடைய அன்பான மனைவி கலிஸ்டா ப்ளோக்ஹார்ட்டால் தான் என் வாழ்க்கை சாத்தியமானது. அவர் என் கனவு மற்றும் லட்சியத்துக்கு ஆதரவாக நின்றார். நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்களாகிய உங்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள்தான் என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினீர்கள். அதற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு ஹாரிஸன் போர்டு கூறினார்.
இண்டியான ஜோன்ஸ் 5ம் பாகம்தான் எனது கடைசி படம் என்று ஹாரிசன் போர்ட் ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.