ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அந்தாலஜி தொடர் 'மார்டன் லவ் சென்னை', இதில் ராஜு முருகன் இயக்கிய 'லால்குண்டா பொம்மைகள்' என்ற கதையில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கவுரி பிரியா. இவர் சினிமாவுக்கு புதிதில்லை. மிஸ்.ஹதராபாத்தாக தேர்வு பெற்ற இவர் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ரைட்டர் பத்மபூசன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். இப்போது இந்த அந்தாலஜி படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. லால்குண்டா பொம்மையில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுகள் பெரிய நம்பிக்கை தருகிறது. தற்போது இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பே வெளியிடுவார்கள். மேலும் கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கவுரி பிரியா.