தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை நிராகரித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எப்பவும் எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை தெரிவிக்கும் முன்பு தயவுசெய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .