பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை நிராகரித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எப்பவும் எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை தெரிவிக்கும் முன்பு தயவுசெய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .