ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பத்து தல' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடிக்கும் அவரது 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.
சரித்திர காலப் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அடுத்த கட்ட நகர்வு குறித்து இயக்குனர் தேசிங், சிலம்பரசன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நன்றி கமல்ஹாசன் சார்'' எனப் பதிவிட்டுள்ளார் சிம்பு. சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தலைமுடியையும் கொஞ்சம் நீளமாக வளர்த்து வருகிறார் சிம்பு. 'ரத்தமும் பேரும் ஆரம்பம்' என படக்கழுவினர் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.