வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தாயின் தாலாட்டு பற்றி எல்லோருக்கும் தெரியும். தாயின் தாலாட்டு கேட்காமல் தூங்கியவர்கள் யாருமில்லை. கிராமிய பாடகர், திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட அந்தோணிதாசன் தந்தையின் தாலாட்டு பாடல் ஒன்றை ஆல்பத்துக்காக பாடி உள்ளார். இதனை பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
"இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன். என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பாடலை பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் சமர்பிக்கிறேன்” என்கிறார் அந்தோணிதாசன்.