ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதையடுத்து சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடிக்கிறார். இதன்பிறகு அவர் ஒரு ஆங்கில படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு சென்னை ஸ்டோரி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிலிப் ஜான் என்பவர் இயக்குகிறார்.
இங்கிலாந்தை சார்ந்த ஹீரோ தனது தாயாரின் மரணத்தை அடுத்து இந்தியாவில் உள்ள தன்னுடைய மூதாதையர்களை பார்ப்பதற்காகவும், தனது தாயாரிடம் இருந்து பிரிந்த தந்தையை கண்டுபிடிப்பதற்காகவும் இந்தியா வருகிறார். அப்படி சென்னை வருபவர் இங்குள்ள கலாச்சாரங்களில் ஈர்க்கப்படுவதோடு, சமந்தா மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது என்பது போன்ற கதையில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.