தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலி பிசியான நடிகையாக மாறினார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஷ் அதன் பிறகு சில படங்கள் நடித்தும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.
சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் மகேஷ் அவர் கூறுகையில்; "ஈட்டி, சுந்தரபாண்டியன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை தவற விட்டுவிட்டேன். 'அங்காடித் தெரு' படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை. அதனாலேயே இது போன்ற படங்களை தவறவிட்டு என் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது" என்று வருத்ததோடு தெரிவித்துள்ளார்.