ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
வாகை சூடவா, மெளன குரு படங்களின் மூலம் பிரபலமானவர் இனியா. தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி, சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'ரைட்டர்' படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். 'ஆதார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'சீரன்'. இதில் இனியாவுடன் அருந்ததி, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் கார்த்திக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். துரை.கே.முருகன் இயக்குகிறார்.
படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் கூறியதாவது : செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை. என்றார்.