ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்வானந்த் திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருட பயணத்தை முடித்துள்ளார். ஷர்வானந்த்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் ஜங்ஷனில் ஷர்வானந்த் பயணித்த கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஷர்வானந்த் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், காருக்கு மட்டுமே சிறிய அளவிலான கீறல் ஏற்பட்டதாகவும் ஷர்வானந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.