இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் ஆர்யா கூறுகையில், ‛‛இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம். இப்படத்தில் இடம்பெறும் வசனம் 'அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு'. நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், இதுபோன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கின்றேன். வசனத்துக்காக அல்லாமல் படத்திலும் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகளும் இருக்கும்.
என் நீண்ட நாள் ஆசை கிராமத்து ஆக்ஷன் கதைகள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். இயக்குனர் முத்தையாவிடம் நான் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது " என இவ்வாறு தெரிவித்தார்.