தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சரத்குமார், அசோக் செல்வன் நிகிலா விமல் நடித்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை, இ4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளன.
படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: இந்த படத்தில் மூத்த போலீஸ் அதிகாரியாக நானும், புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரியாக அசோக் செல்வனும் நடித்திருக்கிறோம். இருவரும் தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளியைப் பிடிப்பதுதான் கதை. கொலையைக் கண்டுபிடிக்கும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். எப்படி புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் கேரக்டர் எனக்கு.
நான் போலீஸ் அதிகாரியாக சில படங்களில் நடித்திருந்தாலும் இதன் திரைக்கதை அதிலிருந்து மாறுபட்டு இருக்கும். 14 நாட்களில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டன. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இது ஒரு 'கிரைம் த்ரில்லர் படம். தற்போது இளம் நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்து வருகிறேன். அப்படியென்றால் நான் இளம் நடிகர் இல்லையா என்று கேட்காதீர்கள், நானும் இளைஞன்தான். என்றார்.