தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மற்றொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, தமிழ், தெலுங்கு என இரு மொழியில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தனது ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முக்கியமான நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தை குறித்து துல்கர் சல்மான் பிறந்தநாள் ஜூலை 28 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.