ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த மாதம் படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் இன்று(ஜூன் 1) மாலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி, மிஷ்கின், எஸ்ஜே சூர்யா, வெற்றிமாறன், பிரதீப் ரங்கநாதன், போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வடிவேலு : உங்கள் வீட்டுப் பிள்ளையான நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் எல்லோர் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும். உதயநிதி நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏ ஆர் ரகஹ்மான் இசையில் பாடி இருக்கிறேன், நான் பாடவில்லை அவர்தான் என்னை பாட வைத்துள்ளார். நான் எங்கும் செல்லவில்லை எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் செல்போனில் வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் மறைந்த என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம் இது, படம் நிச்சயம் வெற்றி பெறும். தேவர் மகன் படத்துக்கு பிறகு எனக்கு மிகப்பெரிய படமாக, குணச்சித்திர வேடம் நிறைந்த கதையாக அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம், அரசியல் படம், புதுமையான படம். உதயநிதிக்கு இது கடைசி படம் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார், இனி அரசியலில் ஹீரோவாக போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.