இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவும் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளதாகவும், அவரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இவர் நடித்திருக்கும் செய்தியை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும், படம் வெளியீட்டின்போது அதனை அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதனை எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவரின் அடுத்தடுத்த படங்களின் பட்டியலை குறிப்பிட்டார். 'பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, கேம் சேஞ்சர் படங்களில் நடித்துள்ளேன். அதுபோக, முக்கியமான ஒரு படம்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த முக்கியமான படம் குறித்த கேள்விக்கு 'அதனை காலம் சொல்லும். நான் சொல்லக் கூடாது' என்றார். இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா, இந்தியன்-2 படத்தை தான் குறிப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.