தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'தி வாரியர்' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் இங்கு படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலுக்கு பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கும். அது வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் ராம் பொத்தனேனியும், நாயகி ஸ்ரீலீலாவும் மைசூரை சுற்றி பார்க்க கிளம்பி விடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.