தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்திய வெர்சனில் சமந்தாவும், வருண் தவானும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு செர்பிய நாட்டில் நடந்து வருகிறது. தற்போது செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்த படங்களை வெளியிட்டுள்ள வருண் தவான், “செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் குழுவிற்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம்” என்று வருண் தவான் பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தாவும் இந்த படங்களை வெளியிட்டு 'மேடம் பிரசிடெண்ட்' என்று எழுதியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.