ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்களும் காரணமாகிறது என்று தெரிவித்தேன். இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை .மேலும், அவரது குழுவில் இருந்த முக்கிய நபர் ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். இதெல்லாம் விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்க மாட்டார். அவரது தூண்டுதலின் பெயரில் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தது. விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.