இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னையில் படித்து, வளர்ந்து, தமிழ் படம் இயக்கினாலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் பூர்வீகம் கேரளா. தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துசரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதான என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவர் இயக்கிய துருவ நட்சத்திரங்கள் படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதன் முதலாக தனது சொந்த மொழியில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'பஜூக்கா' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். என்றார்.