தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னையில் படித்து, வளர்ந்து, தமிழ் படம் இயக்கினாலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் பூர்வீகம் கேரளா. தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துசரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதான என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவர் இயக்கிய துருவ நட்சத்திரங்கள் படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதன் முதலாக தனது சொந்த மொழியில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'பஜூக்கா' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். என்றார்.