2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான 'ரோபோ' படத்தின் இன்ஸ்பிரஷனில் உருவாகி இருந்தது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு 'இனிய உதயம்' என்ற மாதஇதழில் தான் எழுதிய 'திக் திக் தீபிகா' என்கிற கதையைத்தான் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார் என்று தனது வழக்கு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'திக் திக் தீபிகா' கதையும், 'எந்திரன்' கதையும் ஒன்றல்ல, எனவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.