சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான 'ரோபோ' படத்தின் இன்ஸ்பிரஷனில் உருவாகி இருந்தது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு 'இனிய உதயம்' என்ற மாதஇதழில் தான் எழுதிய 'திக் திக் தீபிகா' என்கிற கதையைத்தான் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார் என்று தனது வழக்கு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'திக் திக் தீபிகா' கதையும், 'எந்திரன்' கதையும் ஒன்றல்ல, எனவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.