ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'போர் தொழில்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். பல சினிமா பிரபலங்களும் படம் வெளிவந்த போது பாராட்டினார்கள்.
ஆனால், படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த சரத்குமார் மனைவி ராதிகா இரண்டு வாரங்களுக்குப் பிறகு படத்தைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். “நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம், இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை 'போர் தொழில்' நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவாவது இரண்டு வாரங்களுக்குள் பாராட்டிவிட்டார். சில சினிமா பிரபலங்கள் நல்ல படம் என்று பெயரெடுத்த படங்களைக் கூட ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.