எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா இல்லையா என்பது குறித்து கடந்த வாரத்திலிருந்து அரசியல் வட்டாரங்களிலும், மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும், ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.
நாளை ஜுன் 22ம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அதில் 'நாளைய முதலமைச்சர்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அவர்களாகவே அப்படியான போஸ்டர்களை ஒட்டுகிறார்களா அல்லது விஜய் தரப்பிலிருந்து அப்படி போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்கிறார்களா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் விஜய் பேசிய பிறகு அவரது அரசியல் நுழைவு பற்றி கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படி ஒட்டும் போஸ்டர்கள் குறித்து ஆளும் கட்சி தரப்பிலிருந்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.