தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசி வரும் நிலையில், லால் சலாம் படத்தில் நடித்து முடித்ததும் ரஜினிகாந்த் டப்பிங் பேச உள்ளார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை ஐங்கரன் பிலிம்ஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த கட்டமாக இப்படத்தின் வெளிநாட்டு பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதை அடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் வியாபாரம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.