தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ரெஜினா. இந்த படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா என்பவர் இயக்கி இருக்கிறார். வருகிற 23ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழு புரமோசன்களில் தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ரெஜினா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் சுனைனா. அப்போது அவர் பேசுகையில், சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை பார்த்து விட்டு தான் இந்த ரெஜினா படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். இங்கே காட்டப்பட்ட வீடியோவில் என்னுடைய இளம் வயது புகைப்படங்கள் இருந்தது. அப்போதெல்லாம் சினிமா எனக்கு மிகப் பெரிய கனமாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகி உள்ளதை பார்க்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று கூறிய போது கண்ணீர் விட்டு அழுதார் சுனைனா.
தொடர்ந்தவர் பேசும்போது, ரெஜினா படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். 2018ம் ஆண்டில் அடுத்து என்ன பண்ண வேண்டும் என பலரும் எனக்கு ஆலோசனை கூற ஆரம்பித்ததால், நான் சோர்வடைந்தேன். ஆனபோதும் அந்த ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினேன். தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன். தமிழில் சில்லுக்கருப்பட்டி, தெலுங்கில் ராஜராஜ சோரா போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தேன். அந்த படங்கள் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தன. அதே போன்று ரெஜினாவும் ஒரு நல்ல படமாக இருக்கும். இந்த படம் ஒரு சாதாரண குடும்பப் பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கண்டிப்பாக ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்றார் சுனைனா.