மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
2006ம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்தார். அறிமுகமாகி 19 ஆண்டுகளில் 49 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50வது படம் ஈகை.
இந்த படத்தில் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தரண் குமார் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி ராமசாமி கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது: சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது. ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த படம். தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. என்றார்.