இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஆதரவற்ற நபர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அவற்றை நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். அது மட்டுமின்றி தொழு நோயாளிகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார். இதன் காரணமாக மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருது வழங்கியுள்ளன. கொரோனா காலத்திலும் இறந்தவர்களின் உடல்களை இவர் அடக்கம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது சேவையை அறிந்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது அறக்கட்டளை சார்பில் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறும் அவருக்கு ரஜினிகாந்த் ஊக்கமளித்திருக்கிறார்,