தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஆதரவற்ற நபர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அவற்றை நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். அது மட்டுமின்றி தொழு நோயாளிகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார். இதன் காரணமாக மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருது வழங்கியுள்ளன. கொரோனா காலத்திலும் இறந்தவர்களின் உடல்களை இவர் அடக்கம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது சேவையை அறிந்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது அறக்கட்டளை சார்பில் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறும் அவருக்கு ரஜினிகாந்த் ஊக்கமளித்திருக்கிறார்,